ஓமந்தை பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாத குழந்தை உயிரிழப்பு.!

0
118

வவுனியா – ஓமந்தை – புதியவேலர், சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் வரவேற்பறை சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குழந்தையொன்று உயிரிழந்தது.

இந்த விபத்து நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 02 மாத குழந்தையே உயிரிழந்தது என கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா – ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here