மகள்களின் நி.ர்.வா.ண புகைப்படங்களை விற்று பணம் சம்பாதித்த தாய்.. விசாரணையில் வெளியான தகவல்..!

0
90

தனது இரண்டு சிறு பிள்ளைகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து பல்வேறு நபர்களுக்கு வட்ஸ் அப் மூலம் அனுப்பி பணம் பெற்ற தாயை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

34 வயதான தாய் தனது 6 மற்றும் 13 வயதுடைய மகள்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வேறு நபர்களுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

13 வயது சிறுமி பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் சந்தேகநபரின் தாயார் கைது செய்யப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தாயாரின் கைத்தொலைபேசியை பரிசோதித்த போது இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுமிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மட்டுமின்றி தனது அந்தரங்க புகைப்படங்களையும் அந்தப் பெண் வட்ஸ்அப் மூலம் பல்வேறு நபர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி சந்தேகநபருக்கு சமூக நோய்கள் உள்ளதா என்பதை பரிசோதித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வழக்கு முடியும் வரை இரு மகள்களையும் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here