தங்க நகைகளை கடத்திய ஆணும் பெண்ணும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது.!

0
68

சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தங்க நகைகளுடன் பெண் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாகத் தங்க நகைகளைக் கடத்துவதாக விமான நிலைய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை, சம்மந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரும் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 14 தங்க வளையல்கள் 3 தங்க மாலைகள், 3 தங்க மோதிரங்கள் மற்றும் தங்கக் காதணிகள் உள்ளிட்ட ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here