ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பாடசாலை ஆசிரியை கைது..!

0
28

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார் எனக் கூறப்படும் அனுராதபுரம் பகுதியில் உள்ள அரச பாடசாலையொன்றின் ஆசிரியை நேற்றையதினம் (24) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஆசிரியை தனது கணவருடன் இணைந்து ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விற்பனைக்காக வைத்திருந்த ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியையும் அவரின் கணவரும் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here