தனியார் பேரூந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இளைஞன் உயிரிழப்பு.!

0
81

இரத்தினபுரி பிரதேசத்தில் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்தினபுரி – பெல்மடுல்ல வீதியில் ரில்ஹேனவத்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (25) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரியிலிருந்து பெல்மடுல்ல நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் காயமடைந்துள்ள நிலையில் பெல்மடுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி – வெலிகளுவ பிரதேச்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரது சடலம் பெல்மடுல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here