கிளிநொச்சியில் விசர்நாய்க் கடிக்கு இலக்கான 4 வயது சிறுமி உயிரிழப்பு.!

0
115

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விசர்நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

குமாரசாமிபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த நான்கு வயதாக சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here