திருகோணமலை கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்ப்பு.!

0
60

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோனா கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று (18/07/2024) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா அகம்மட் ஒழுங்கையைச் சேர்ந்த 33 வயதான மஃரூப் முன்னவ்வரா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலீசார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தி சுவாதீனமற்றவர் எனவும் கடலில் குளிப்பதற்காக இன்று காலை கடலில் இறங்கியதால் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சடலத்தை விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்த கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here