யாழில் மோட்டார் சைக்கிளை மோதி தள்ளிய ஹையேஸ் வாகனம் – பெண்ணொருவர் உயிரிழப்பு.! CCTV காட்சி

0
131

யாழ்ப்பாணம் – சுன்னாகம் சந்தியில் இருந்து காங்கேசன்துறை செல்கின்ற பக்கம் 100 மீற்றர்கள் தூரத்தில், ஹையேஸ் வாகனம் ஒன்று வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பெண்கள் தமது பக்கத்தினால் சென்றுகொண்டிருந்தவேளை, முந்திச் செல்ல முயன்ற ஹையேஸ் வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த பெண்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கானையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆனந்தன் சிவானந்தகௌரி என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியின் கரையில் இருந்து வீதிக்கு வாகனத்தை ஏற்றும் போது வீதியின் இருபக்கமும் சரியாக அவதானித்து பக்கவாட்டு கண்ணாடிகளை அவதானித்து ஏற்றுங்கள் தேவையற்ற விபத்துக்களை தடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here