யாழில் பச்சிளம் குழந்தையின் மரணத்தில் மர்மம்.. பொலிஸார் தீவிர விசாரணை.!

0
123

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாத குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயை வளர்த்த இருவரையும் குழந்தையின் தந்தையையும் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்துள்ளனர்.

அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தையொன்று நேற்று உயிரிழந்துள்ளது.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தை அசைவற்று கிடந்ததாக குழந்தையின் தாய் குழந்தையை அளவெட்டி வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை கொண்டு சென்றுள்ளார்.

குழந்தையை அங்கிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்றிய போது, குழந்தை உயிரிழந்துள்ளது.

குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால், உட்கூற்று பரிசோதனை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட வேளை, குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்து இருந்தமை, தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமை, உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தையின் தந்தை வெளியூரில் தங்கி இருந்து வேலை செய்வதாகவும், தாயின் பராமரிப்பிலேயே குழந்தை இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அந்நிலையில் குழந்தையின் தாயார், மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸ் விசாரணையில் குழந்தை பால் குடிக்க மறுப்பதால், கைகள் கால்களை திருகினேன். ஆனால் எனது குழந்தையை நான் கொலை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தாயை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குழந்தையின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவை நீதிமன்றில் பாரப்படுத்திய பின்னரே, நீதிமன்ற உத்தரவின் பேரிலையே குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது

உயிரிழந்த குழந்தை – தலையில் தாக்கப்பட்டு செயற்கையான முறையில் மரணம் நிகழ்ந்ததாக மருத்துவ பரிசோதனையில் அறிக்கை கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here