மட்டக்களப்பில் விபத்தில் சிக்கிய குடும்பம்.!

0
72

மட்டக்களப்பு – கரடியனாறு, மரப்பாலம் பகுதியில் ஜீப் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

விடுமுறையினை கழிக்க கண்டியில் இருந்து மட்டக்களப்பு பகுதிக்கு வந்த குடும்பம் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த மூவர் மகாஓயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஜீப் வண்டியில் 5 பேர் பயணித்த நிலையில் விபத்தில் மூவர் படுகாயமடைந்திருப்பதாகவும், இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் அதிகவேகமாக வந்த ஜீப் வாகனம் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட தூரத்திற்கு பாய்ந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here