மடு தேவாலயத்திற்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்.!

0
80

காரும், வேனும் மோதி இடம்பெற்ற விபத்தில் சிறு குழந்தை மற்றும் பெண் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

இன்று (11) அதிகாலை 2.45 மணியளவில் மாரவில குருச தேவாலயத்திற்கு செல்லும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளை வீதியில் இருந்து அதிவேகமாக வந்த கார் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலாபம், பம்பல பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர்.

மடு தேவாலயத்திற்குச் செல்வதற்கு முன்னர், மாரவில குருச தேவாலயத்திற்கு பயணித்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தின் போது காரை ஓட்டிச் சென்றவர் மதுபோதையில் இருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here