மட்டக்களப்பில் மாணவி து.ஸ்.பி..ரயோ.க.ம் – சித்திர பாட ஆசிரியருக்கு விளக்கமறியல் !

0
67

மட்டக்களப்பில் மாணவி ஒருவர் தனக்கு சித்திரபாட ஆசிரியர் ஒருவர் வாய்மூலமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வருவதாக செய்த முறைப்பாட்டையடுத்து நீதிமன்றில் சரணடைந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை தொடர்ந்து 14 நாட்கள் விளக்கமறியில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (20) உத்தரவிட்டார்.

மட்டக்களப்பில் பெண்கள் பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவருக்கு கற்பித்துவரும் ஆசிரியர் ஒருவர் வாய் மூலமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் கொண்ட வார்த்தைகளை பிரயோகித்து வந்துள்ளார்.

இது தொடர்பாக குறித்த ஆசிரியர் இது தொடர்பாக எவருக்கும் தெரிவித்து என்னை ஒன்றும் செய்யமுடியாது, உயர்தர மாணவி பாலியல் துஸ்பிரயோகம் என முகநூலில் பதவிடுவேன் எனவும் தான் ஒரு அரசியல் கட்சி சார்ந்தவர் எனவும் என்னை எதிர்த்தால் இந்த மாவட்டத்தில் இருக்கமுடியாது என அச்சுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அவரது வகுப்பாசிரியர் மற்றும் பெற்றோருக்கு தெரிவித்துவந்துளார். இந்நிலையில் கடந்த மாதம் 11 ஆம் திகதி குறித்த ஆசிரியர் பாடத்திட்டத்தில் இல்லாத படங்களை வரையுமாறும் இல்லாவிட்டால் வகுப்பறையில் இருந்து வெளியேறுமாறும் தெரிவித்த நிலையில் மாணவி வகுப்பறையில் இருந்து வெளியேறி அதிபரிடம் முறையிட சென்ற நிலையில் அவர் இல்லாத நிலையில் வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த அநீதியை பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்

இதனையடுத்து பெற்றோர் பாடசாலை பிரதி அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்த நிலையில் அவர் பாடசாலை அதிபர் கவனத்திற்கு கொண்டு வந்து பெற்றோரிடம் கடிதம் ஒன்றைவாங்கி தாங்கள் தீர்வு பெற்றுதருவதாக உத்தரவளித்த நிலையில் மீண்டும் பாடசாலைக்கு மாணவி சென்ற நிலையில் குறித்த ஆசிரியர் மாணவியை கல்வி கற்கும் சூழலை குழப்பி வந்த நிலையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக ஜனாதிபதிக்கு சிங்கள மொழியில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி உடன் விசாரணை செய்யுமாறு பொலிஸாருக்கு கடந்த யூலை 22 ஆம் திகதி பணிப்புரை விடுத்ததையடுத்து பொலிஸார் பாதிக்கப்பட்ட மாணவியிடமும் பாடசாலை அதிபர் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடம் வாக்கு மூலத்தை பெற்ற நிலையில் பொலிஸ் நிலையத்துக்கு குறித்த ஆசிரியரை வருமாறு அழைக்கப்பட்ட போதும் அவர் பொலிஸ் நிலையம் செல்லாது தலைமறைவாகி வந்துள்ள நிலையில் கடந்த 7 ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தலைமையிலான சட்டத்தரணிகள் ஊடாக நீதின்றில் ஆஜர்படுத்தி நேற்று (20) விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here