வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.. நாளை முதல் சூரியன் உச்சம் கொடுக்கும்.!

0
74

ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை சூரியன் நேரடியாக இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைகளுக்கு மேலே இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனவே நாளை (28 – ஆம் திகதி) மதியம் 12:11 மணியளவில் டெல்ப் தீவு, புனரீன், தட்டுவன்கொட்டி, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக் கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஏனைய பகுதிகளில் முக்கியமாக மழை இல்லாத வானிலை நிலவும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது 30 முதல் 40 கி.மீ வரை பலத்த காற்றும் வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here