துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.!

0
48

கல்கிரியாகம திக்வண்ணாகம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிரியாகம திக்வண்ணாகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான கருணாரத்ன முதியன்சேலாகே குணசிங்க என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் மார்பில் துப்பாக்கி சூடு பட்டதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் அருகிலுள்ளவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னரே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here