யாழ் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த சோகம்.!

0
41

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் நேற்று ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார்.

தெல்லிப்பழை காவல் நிலையத்தில் கடமையாற்றும், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

வேலணை பகுதியிலிருந்து அராலி சந்தியை நோக்கி உந்துருளியில் பயணித்தபோது மற்றுமொரு உந்துருளியுடன் மோதி, எதிரே வந்த ஜே.சி.பி ரக வாகனத்தினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here