தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயது சிறுவன் விபரீத முடிவு.. யாழில் சம்பவம்.!

0
27

விளையாடுவதற்கு தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயதுச் சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்து ஞாயிற்றுக்கிழமை (15) உயிர்மாய்த்துள்ளான்.

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவனுக்கு அவனது தந்தை கைப்பேசியை கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவன் வீட்டின் அறையில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளான்.

அவனது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அளவெட்டி அருணோதயாவில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here