கிளிநொச்சி – விபத்தில் 22 வயது இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்.!

0
34

கிளிநொச்சியில் நேற்று (19) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 22 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பன்னங்கண்டி பகுதியைச்சேர்ந்த அந்தோனி அல்பிரட் – அனுஷன் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார் வீதியால் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் மோதி இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய வாகனம் மற்றும் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here