யாழில் நடந்த விபத்தில் காயமடைந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்.!

0
1

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – தனங்கிளப்பு பகுதியை சேர்ந்த நந்தகுமார் செந்தூரன் (வயது-41) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பேருந்து மோதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here