வவனியாவில் 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!

0
225

வவுனியா – ஓமந்தை, கள்ளிக்குளம் பகுதியில் சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தம் நேற்று (16) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கள்ளிக்குளம், மாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 8 வயது க.டிலக்சன் என்ற சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுவன் நேற்று காலை பாதுகாப்பற்ற கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்ற போது கிணற்றில் விழுந்த வாளியை எடுக்க முற்பட்ட போது கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சிறுவனின் உயிரிழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here