மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கணவன் செய்த செயல்.!

0
199

சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி ராம் கலா (39). இவர்களுக்கு கோகுல் (11) என்ற மகனும், பவித்ரா (6) என்ற மகளும் உள்ளனர்.

பாலாஜி தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாலாஜியும், அவரது மனைவியும் கடந்த மூன்று மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

பாலாஜியின் மனைவி பவளமலைப்பட்டியில் உள்ள தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். பாலாஜி சென்னையில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராம்கலாவின் அண்ணன் நிச்சயதார்த்தத்திற்காக சென்னையில் இருந்து பவளமலைப்பட்டிக்கு வந்தார் பாலாஜி.

அப்போது பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ​​ஆத்திரமடைந்த பாலாஜி, காய்கறி கத்தியால் ராம்கலாவின் கழுத்தை அறுத்தார்.

இதில் பலத்த காயமடைந்த ராம்கலாவை அவரது உறவினர்கள் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராம்கலா உயிரிழந்தார்.

இதையடுத்து எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் பாலாஜி ஆஜரானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மனைவியை கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here