ஜேர்மனிக்கு செல்ல முயன்ற யாழ் இளைஞன் விமான நிலையத்தில் வைத்து கைது..!

0
100

போலியான ஜேர்மன் விசாவைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர், இன்று (11) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் – இளவாலைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர். அவர் புது டெல்லிக்குச் சென்று பின்னர் ஜேர்மனிக்கு மற்றொரு விமானத்தில் செல்ல முயன்றுள்ளார்.

தொழில்நுட்ப சோதனைகளின் போது, அவர் வழங்கிய ஜேர்மன் விசா போலியானது என்பது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here