பொலிஸ் காவலில் இருந்த இளம் பெண் எடுத்த முடிவு.!

0
124

மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் இன்று (22) அதிகாலை உயிர்மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32 வயதுடைய இந்தப் பெண் நேற்று (21) மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.00 மணியளவில் பொலிஸ் நிலையத்தின் சிறை கூடத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here