77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகளுக்கு நாளை 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர்.
அதன்படி, தீவு முழுவதும் சிறையிலுள்ள பொது மன்னிப்புக்கு தகுதியுடைய கைதிகளை சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…
தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட பொது மன்னிப்புக்கு தகுதியுடைய 279 ஆண் கைதிகளும் 6 பெண் கைதிகளுமாக மொத்தம் 285 தைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.