லண்டன் – Liverpool Bootle நகரில் கடல் உணவு (நண்டு) ஒவ்வாமை காரணமாக 28 வயதான இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாணம் நற்பிட்டிமுனையை பூர்விகமாக கொண்டவரும், UK- Liverpool Bootle நகரில் வசித்த 28 வயதான காயத்ரி ஜெயதீசன், கடந்த ஜனவரி 25 அன்று உள்ள தனது வீட்டில் நண்டு கறி சாப்பிட்ட பின்னர் உணவு ஒவ்வாமை காரணமாக (allergic reaction to seafood) உயிரிழந்துள்ளார்.
இவர் லண்டனுக்க சென்று 3 வருடங்களே ஆகியுள்ள நிலையில் இந்த துயரம் இடம்பெற்றுள்ளது.
அன்றைய தினம் திருமதி காயத்ரி ஜெயதீசன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர் தனது 15 மாதமான மகன் மற்றும் இலங்கையிலிருந்து சென்ற அவரது தாயாருடன் இருந்துள்ளார்.
சாப்பிட்ட உணவு (நண்டு) ஒவ்வாமை காரணமாக வேலைக்கு சென்ற கணவருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தார். அவர் ஆம்புலன்ஸை அழைத்தும் மருத்துவர்களால் அவரது மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.