கதிர்காமம் கடற்படை விடுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அங்கு தங்கியிருந்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மாத்தறை கேகனதுர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரும் 36 வயதுடைய ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
காலை உணவு தயாரிப்பதற்காக சென்ற போது இந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கதிர்காமம் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திஸ்ஸமஹாராம தெபரவெவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.