அரசாங்கத்தினால் எந்தவிதமான உதவித்தொகையையும் பெற்றுக்கொள்ளாத 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியோர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா உதவித்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை தேசிய முதியோர் செயலகம் வெளியிட்டுள்ளது.
குறித்த உதவித்தொகை கொடுப்பனவு இன்று வியாழக்கிழமை முதல் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாதத்திற்கான உதவித்தொகை மற்றும் நிலுவையில் உள்ள உதவித்தொகைகளை தபால் நிலையங்கள் மற்றும் உப தபால்நிலையங்கள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அஸ்வெசும பெறும் குடும்பங்களிலுள்ள முதியோர்களைத் தவிர்த்து, இதுவரை உதவித்தொகையைப் பெறாத முதியோர்களுக்கு மட்டுமே இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என்று தேசிய முதியோர் செயலகம் மேலும் சுட்டிக்காட்டுகிறது.