கணேமுல்ல சஞ்சீவ கொலை.. மேலுமொரு கான்ஸ்டபிள் கைது.!

0
6

புதுக்கடை நீதிமன்றத்தின் 5 ஆம் இலக்க நீதிமன்ற அறைக்குள் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸின் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றம் தொடர்பாக இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட வேனின் ஓட்டுநரும், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த காரின் ஓட்டுநரும் ஆவார் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு வேன் வழங்கியதற்காக அதுருகிரிய பொலிஸின் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார். வேனின் செசி மற்றும் என்ஜின் எண்கள் மற்றும் பதிவுத் தகடுகள் போலியானவை என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் கொட்டாவ, பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவருக்கு 37 வயது. மேற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) இந்தக் குற்றத்தை விசாரித்து வருகிறார். சஞ்சீவ தர்மரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here