யாழில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து..! CCTV வீடியோ

0
31

யாழில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவம் நேற்றையதினம்(27) மாலை இடம்பெற்றது. இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

யாழ் பிரவுண் வீதி சந்தியில் ஆட்டோவும் மோட்டார் சைக்கிலும் மோதி விபத்துள்ளானதுடன் அதேசமயம் வீதியில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளொன்றையும் ஆட்டோ மோதித் தள்ளியது.

இந்த விபத்தில் பாரிய சேதங்கள் இல்லாது தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், குறித்த சந்தியில் நாளாந்தம் தொடர்ச்சியாக வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது, ஆகையினால் குறித்த சந்தியில் வீதிச் சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட வேண்டுமென தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here