காலி – கொழும்பு வீதியில் பலப்பிட்டி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த சைக்கிள் ஒன்று மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.