லண்டனில் பேரூந்துடன் மோதிய கார் – புலம்பெயர் தமிழ்க் குடும்பப் பெண் உயிரிழப்பு..! Video

0
40

வடமேற்கு லண்டனில் பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட விபத்தில் சித்ரா வான்மீகநாதன் என்ற தமிழ் பெண் ஒருவர் உயிர் இழந்து உள்ளார்.

வெம்ப்லியைச் சேர்ந்த 46 வயதான அவர் திங்களன்று 21:20 GMT மணியளவில் ஹாரோவின் பெஸ்பரோ சாலையில் இடம் பெற்ற வாகன விபத்தில் உயிர் இழந்தார். அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மேலும் இரண்டு பாதசாரிகள், 12 வயது சிறுவன் மற்றும் 30 வயதுடைய ஒரு பெண், பஸ்ஸும் காரும் மோதியதில் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் காரை ஓட்டிச் சென்ற சாரதி, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here