பிள்ளைகள் வெளிநாட்டில்.. யாழில் தனிமையில் இருந்த தந்தை எடுத்த முடிவு.!

0
81

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதியவர் ஒருவர் மனவிரக்தியில் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

இதன்போது யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 86 வயதுடைய பா.ஜோசப் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்…

குறித்த நபரின் மனைவி ஏற்கனவே உயிரிழந்து விட்டார். அவரது பிள்ளைகள் மூவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த முதியவர் சனிக்கிழமை (8) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.

அவரது சடல மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here