நாளை (12) அஸ்வெசும கொடுப்பனவு வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்..!

0
68

2025 மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை (12) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது.

நலன்புரி நன்மைகள் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, 1,732,263 பயனாளி குடும்பங்களுக்கு 12,597,695,000 ரூபாய் வௌியிடப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த பயனாளிகள் நாளை முதல் தங்கள் அஸ்வெசும வங்கிக் கணக்கிலிருந்து உதவித்தொகையைப் பெற முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

மாதாந்த அஸ்வெசும கொடுப்பனவு அஸ்வெசும இணையத்தள கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7 ஆம் திகதி முதல் 12 திகதிக்குள் அஸ்வெசும இணையத்தள கணக்கில் வரவு வைக்கப்படும்.

அஸ்வெசும இணையத்தள கணக்கில் எப்படி நம்முடைய அஸ்வெசும கொடுப்பனவு வரவு வைக்கப்பட்டதை பார்க்க முடியும்.

முதலாவதாக உங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது QR ல் இருக்கும் HH இலக்கம் உங்களிடம் இருப்பது கட்டாயம். அதை உள்ளிட்டு நீங்கள் உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம்.

பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட கீழே தரப்பட்டுள்ளது இணையத்தளத்திற்கு செல்லவும். (லிங் கீழே உள்ளது)..

https://iwms.wbb.gov.lk/household/search

உதாரணமாக (Selected Category – Poor) என இருந்தால் உங்கள் கணக்கில் 10,000/- வைப்பு செய்யப்பட்டு இருப்பதை காணமுடியும்

அஸ்வெசும கொடுப்பனவுக்கு இதுவரைக்கும் தெரிவானவர்களின் பெயர்ப் பட்டியலை எப்படி பார்க்க வேண்டும்..?

முதலாவதாக அஸ்வெசும பெயர்ப் பட்டியல் இணையத்தளத்திற்கு சென்றவுடன் உங்களுக்கு 5 விதமான கேள்விகள் கேட்கப்படும் அதனை நீங்கள் சரியாக தெரிவு செய்ய வேண்டும்.

Province, District, Divisional Secretariat Division, GN Division போன்றவற்றை சரியாக கொடுக்க வேண்டும்.

பின்னர் View Registry என்பதை கொடுங்கள்.

கிலிக் செய்தவுடன் உங்களுடைய கிராம அலுவலர் பிரிவில் அஸ்வெசும கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை பார்வையிட முடியும்.

பெயர்ப் பட்டியலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிலிக் செய்யவும்.

https://iwms.wbb.gov.lk/household/list

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here