பம்பலப்பிட்டியில் ரயிலில் மோதி நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (10) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மருதானையிலிருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயிலில் மோதியதில் இந்த நபர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.