புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது..!

0
33

புதுக்குடியிருப்பு, அச்சலங்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (12) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி அச்சலங்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த 22, 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 418 லீற்றர் கோடா, 60 லீற்றர் கசிப்பு மற்றும் 4 பீப்பாய்கள் என்பன புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று (13) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் சந்தேக நபர்கள் நபர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் மிளகாய்த்தூள் வீசிக் கொள்ளை.. சிக்கிய கொள்ளையன்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here