வௌிநாட்டு ஆசையைக் காட்டி பண மோசடி செய்த பெண் கைது.!

0
10

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி வழங்கி, 1,340,000 ரூபா பண மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 3 முறைப்பாடுகள் தொடர்பில் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், நேற்று (14) மாலை நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு 5 பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையின் போது, ​​நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக தெரிவித்து இவ்வாறு பண மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம், வெள்ளவத்தை, வாத்துவ, மீகஹவத்த, ஹபராதுவ மற்றும் கிரியுல்ல ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here