கிளிநொச்சியில் பிரபல யூட்டுபேர் DK கார்த்திக் மற்றும் அவரது மனைவியும் கைது.! Video

0
50

கிளிநொச்சியில் பிரபல யூட்டுபேர் DK கார்த்திக் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தர்மபுரம் பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலுக்குள்ளான நபர்களுக்கு தலையில் 5 பாரிய வெட்டுக்கள், முதுகு மற்றும் கைகளில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரது மனைவிக்கு 6 வெட்டுக்கள், மற்றும் அவரது தாயின் கை முறிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பம் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டே DK கார்த்திக் மற்றும் அவரது மனைவி நேற்றைய தினம் (15) கிளிநொச்சி போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இருப்பினும் முழுமையான தகவல்கள் என்னும் வெளியாகவில்லை.. மேலதிக விசாரணையை கிளிநொச்சி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ கீழே இணைக்கப்படுள்ளது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here