மார்ச் 18 ஆம் திகதி செவ்வாய்க் கிழமையான இன்று உங்கள் ராசிக்கான பலன்கள்..!

0
24

மேஷம்:
மேஷராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடக்கும். லாபமும் அதிகரிக்கும். இன்று காலை துர்கையை வழிபடுவதன் மூலம் நன்மைகள் கூடப் பெறலாம்.

ரிஷபம்:
ரிஷபராசி அன்பர்களே! அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். சகோதர வகையில் ஆதாயம் ஏற் படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறு மையைக் கடைப்பிடிப்பது நல்லது. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும், எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபா ரத்தில் சக வியாபாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். இன்றைய நாளை விநாயகப் பெருமானை வழிபட்டுத் தொடங்க, காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்:
மிதுனராசி அன்பர்களே! தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்டநாள்களாக எதிர் பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு மகான்களை தரிசிக்கவும் அவர்களுடைய ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு ஏற்படும். குடும்பப் பொறுப்புகளை மகிழ்ச்சியு டன் நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவி யுடன் சமாளித்துவிடுவீர்கள். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மகான் ஶ்ரீராகவேந்திரரை வழிபடுவதன் நன்மைகள் அதிகரிக்கும்.

கடகம்:
கடகராசி அன்பர்களே! தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். சிலருக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நீண்டநாள்களாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்திருந்த தெய்வப் பிரார்த்தனைகளை இன்று நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று வேங்கடேச பெருமாளை தியானித்து வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்:
சிம்மராசி அன்பர்களே! மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். தந்தை வழியில் சில செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். அலு லகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுத லாக இருக்கும். ஆனாலும், பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். இன்று சூரியபகவானை வழிபடுவதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்பு கள் கிடைக்கப் பெறலாம்.

கன்னி:
கன்னிராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். குடும்பப் பொறுப்புகளை நிறை வேற்றுவதில் அலைச்சலும் சோர்வும் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக் கும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். உற வினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பகூடும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும். மகாவிஷ்ணுவை வழிபட முயற்சிகள் பலிதமாகும்.

துலாம்:
துலாராசி அன்பர்களே! உற்சாகமான நாளாக இருக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களால் திடீர் செலவுகளும் ஏற்படும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் இன்னல்களைப் போக்கிக் கொள்ளலாம்.

விருச்சிகம்:
விருச்சிகராசி அன்பர்களே! அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்கள் வருகையால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். கூடுமானவரை அவர்களைக் கண்டிக்காமல் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். இன்று முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைச் சமாளித்துவிடலாம்.

தனுசு:
தனுசுராசி அன்பர்களே! புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வெளியூர்ப் பயணங் களால் ஆதாயம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவ லகப் பணியின் காரணமாகப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். இன்று மகாலட்சுமியை வணங்குவது எதிர்பாராத பணலாபத்தைத் தரும்.

மகரம்:
மகரராசி அன்பர்களே! அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் அல்லல்களைப் போக்கிக்கொள்ளலாம்.

கும்பம்:
கும்பராசி அன்பர்களே! எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சி களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். நண்பர்களைச் சந்திக்கவும், அவர்கள் மூலம் ஆதாயம் பெறவும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்பு ஒன்றை ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் நன்மையே உண்டாகும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. இன்று விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் மன அமைதி பெறலாம்.

மீனம்:
மீனராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். உறவி னர்கள் வருகை சில சங்கடங்களைத் தரும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். சகோதர வகையில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் ஏற்படும் சில பிரச்னைகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும். இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்களைப் போக்கிக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here