மட்டக்களப்பில் 17 வேட்புமனுக்கள் நிராகரிப்பு..!

0
18

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 139 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் 118 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 101 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி. எம். சுபியான் தெரிவித்தார்

மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்டத்தில் 02 நகரசபை 01 மாநகரசபை 09 பிரதேச சபை உட்பட 12 உள்ளூராட்சி மன்றங்களுக்காககோறளைப்பற்று வடக்கு சபைக்கான சர்வஜன அதிகாரம் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது

ஏறாவூர் பற்று பிரதேச சபையில் விநாயகமூர்த்தி விஜயராஜ தலைமையிலான சுயேச்சைக்குழு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அப்துல்வகாப் முகமட் உசையின் என்பவருடைய மனுக்கள் நிராகரிக்கப்பட்டு ள்ளன. ஏறாவூர் நகர சபையில் 10 அரசியல் கட்சிகள் ஒரு சுயேச்சைக்குழு உட்பட 11 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு 7 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 2 சுயேச்சைக்குளக்களுமாக 9 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. இதில் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

போரதீவுபற்று பிரதேச சபைக்கு 5 கட்சிகள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சிவனேசராசா ஒளிர்வளசுதன் மற்றும் அரசரத்தினம் சப்த தவதீஸ் ஆகியோரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன

மட்டக்களப்பு மாநகர சபைக்கு 9 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சைக்குழு உட்பட 10 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , ஸ்ரீ தொழிலாளர் கட்சி,பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசிய கட்சிகளுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் கருணாநிதி தர்சிகா என்பவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது

மண்முனைபற்று பிரதேச சபைக்கு 11 கட்சிகளும் 7 சுயேச்சைக் குழுக்களுமாக 18 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ், சோமசுந்தரம் மகேந்திரன் தலைமையிலான சுயேச்சைக்குழு, கிருஸ்ணபிள்ளை கியானர் மற்றும் செல்லத்துரை தங்கவேல் தலைமையிலான சுயேச்சைக் குழுக்கள் மற்றும் ஸ்ரீ தொழிலாளர் கட்சி களின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நல்லதம்பி சுரேந்திரன் சுயேட்சை குழுவில் திலகவதி சுரேந்தின், குணசுந்தரம் திவாகர், வடிவேல் பவளக்கொடி ஆகியோரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று பிரதேச சபைக்கு 8 கட்சிகளும் 3 சுயேச்சைக் குழுக்கள் உட்பட 11 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன இதில் விமலசேன லவக்குமார் தலைமையிலான மற்றும் குணரத்தினம் புலேந்திரன் தலைமையிலான சுயேச்சைக் குழுக்கள் இரண்டு நிராகரிக்கப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் செல்லத்தம்பி விமலராஜ் என்பவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு 10 கட்சிகளும் ஒரு சுயேச்சைக்குழு உட்பட 11 வேட்புமனுக்கள் தாக்கல் செய்தன இதில் அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது

காத்தான்குடி நகரசபைக்கு 7 அரசியல் கட்சிகளும் 3 சச்சை குழுக்கள் உட்பட 10 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் சர்வஜன அதிகாரம் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு 7 அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு 5 கட்சிகளும் ஒரு சுயேச்சைக்குழு உட்பட 6 வேட்புமனு தாக்கல் செய்தன இதில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது

மாவட்டத்தில் மொத்தமாக 4 லட்சத்து 55 ஆயிரத்து 520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 444 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. 144 வட்டாரங்களில் இருந்து 146 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து மொத்தமாக 274 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here