மார்ச் 20 ஆம் திகதி வியாழக் கிழமையான இன்று உங்கள் ராசிக்கான பலன்கள்..!

0
53

மேஷம்:
மேஷராசி அன்பர்களே! மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை யால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. பிற்பகலுக்கு மேல் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும். இன்று சூரியபகவானை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் பெரிதளவு குறையும்.

ரிஷபம்:
ரிஷபராசி அன்பர்களே! காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உ றவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், அவர்களுக்காக வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன், சிலர் கடன் வாங்கவும் நேரிடும். வியாபாரம் எப்போதும்போல் நடை பெறும்.மாலையில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். இன்று விநாயகரை வழிபடுவதன் மூலம் காரியங்களை சாதித்துக்கொள்ளலாம்.

மிதுனம்:
மிதுனராசி அன்பர்களே! மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்..சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகை யால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். மகாவிஷ்ணு வழிபாடு மன மகிழ்ச்சி தரும்.

கடகம்:
கடகராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. மாலையில் நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும் நாள்.

சிம்மம்:
சிம்மராசி அன்பர்களே! எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். ஆனால், உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. சிலருக்கு நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை யைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் எதிர்பார்த்தபடி இருந்தாலும், சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். கந்தக் கடவுளை வழிபடுவதன் மூலம் முயற்சிகளில் வெற்றி காண முடியும்.

கன்னி:
கன்னிராசி அன்பர்களே! பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் முன்னேற்றத்துக்கான வாய்ப்பு ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளை அகற்றும்.

துலாம்:
துலாராசி அன்பர்களே! மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். வீட்டில் மராமத்துப் பணிகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் கவனமாக இருக்கவும். துர்கை வழிபாடு எதிலும் வெற்றியைத் தரும்.

விருச்சிகம்:
விருச்சிகராசி அன்பர்களே! இன்றைக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சிவ வழிபாடு சிரமங்களைப் பெரிதளவு குறைக்கும்.

தனுசு:
தனுசுராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். அம்பிகையை வழிபட்டு நாளைத் தொடங்குவது நலம் சேர்க்கும்.

மகரம்:
மகரராசி அன்பர்களே! இன்றைக்கு உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மனதில் தைரியம் அதிக ரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவி னர்கள் மூலம் எதிர்பாராத பண உதவி கிடைப்பது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல் தீர்க்கும்.

கும்பம்:
கும்பராசி அன்பர்களே! எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். எதிரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளால் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. அம்பிகை வழிபாடு சகல நன்மைகளும் தரும்.

மீனம்:
மீனராசி அன்பர்களே! இன்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும். சிலருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவி னர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் கையிருப்பு குறைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்களால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here