இன்றையதினம் யாழ் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 290 போதை மாத்திரைகளுடன் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அவர்களின் கீழ் இயங்கும் காவல்துறையினரால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.