33 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது.!

0
33

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது 33 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 42 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திக்வெல்ல, ஊருகமுவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 400 மில்லியன் ரூபாய் என்று பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here