காலி – நெலுவ பகுதியில் பலூன் துண்டு தொண்டையில் சிக்கியதால் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நெலுவ பகுதியை சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெற்றோர் வீட்டில் இருந்தபோது, குறித்த சிறுவன் பலூனை வைத்து ஊதி விளையாடிக்கொண்டிருந்ததாகவும், இதன் போது பலூன் வெடித்து அதில் ஒரு துண்டு சிறுவனின் தொண்டையில் சிக்கி ஒட்டிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக குறித்த சிறுவன் நெலுவ – மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.