இலங்கையில் நடந்த சோகம்.. பலூன் துண்டு தொண்டையில் சிக்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு.!

0
91

காலி – நெலுவ பகுதியில் பலூன் துண்டு தொண்டையில் சிக்கியதால் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நெலுவ பகுதியை சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெற்றோர் வீட்டில் இருந்தபோது, ​​குறித்த சிறுவன் பலூனை வைத்து ஊதி விளையாடிக்கொண்டிருந்ததாகவும், இதன் போது பலூன் வெடித்து அதில் ஒரு துண்டு சிறுவனின் தொண்டையில் சிக்கி ஒட்டிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த சிறுவன் நெலுவ – மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here