கொழும்பில் 30 வயது இளைஞன் ஒருவர் சடலமாக மீட்ப்பு.!

0
49

கொழும்பு – கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தக்கியா வீதி, போருதொட்ட பிரதேசத்தில் உள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (20) இரவு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொச்சிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here