இலங்கை விமானப் படைக்கு சொந்தமான K8 ரக ஜெட் விமானமொன்று வாரியபொல பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு விமானிகளும் பத்திரமாக பருசூட் மூலம் தரை இறங்கியதாக கூறப்படுகின்றது.
கட்டுநாயக்க பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த ஜெட் விமானம், ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் வாரியபொல, மினுவன்கெட்டே பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானம் எரிந்து தீக்கிரை ஆகியுள்ளது. வீடியோ இணைக்கப்படுள்ளது.