யாழில் முச்சக்கர வண்டி மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

0
71

யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்ற குடும்பஸ்தர் மீது முச்சக்கரவண்டி மோதியதில் அவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ் நாவற்குழி – புதிய குடியிருப்பு திட்டம் பகுதியைச் சேர்ந்த அந்தோனி ரிக்மன் டெனிஸ் (வயது-44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்றையதினம் தனது பத்து மாத குழந்தையையும் துவிச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு நாவற்குழி வீதியால் பயணித்தார்.

இதன்போது அவ்வீதியால் வந்த முச்சக்கர வண்டி மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

இந்நிலையில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

முச்சக்கரவண்டியை செலுத்தியவர் மதுபோதையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here