அதிர்ச்சி சம்பவம்… பிக்கு ஒருவருக்கு நேர்ந்த சோகம்..!

0
39

எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள மடாலயம் ஒன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (25) பிற்பகல் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொலை செய்யப்பட்ட பிக்குவிற்கு 69 வயது, அவர் கிரலோகம பகுதியில் உள்ள ஒரு மடாலயத்தில் வசித்து வந்துள்ளார்.

உயிரிழந்த பிக்குவை சந்திப்பதற்காக வந்த நபரொருவரும் மற்றும் வேறொரு விகாரையைச் சேர்ந்த பிக்குவும் இந்தக் கொலையைக் கண்டு பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் அளித்ததாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பின்னர், பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், பிக்குவிற்கு முச்சக்கர வண்டி மற்றும் சாரதி ஒருவர் இருப்பதும் தெரியவந்த நிலையில், குறித்த சாரதி தற்போது மடாலயத்தில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த முச்சக்கர வண்டி சாரதி பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கொலையை யார் செய்தார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்று பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here