மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி வழங்கியதாகக் கூறப்படும் 4 சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று சனிக்கிழமை மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதவான் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன்படி சந்தேக நபர்களை எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.