முல்லைத்தீவு – நாயாறு கடலில் குளிக்க சென்ற யுவதிகள் குழுவினர் நீரில் மூழ்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
குறித்த யுவதிகள் குழுவினர் 3 பேர் நீரில் மூழ்கிய நிலையில் இருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு யுவதி நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்படுள்ளார்.
இன்று (31) காலை முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும், தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு வந்துள்ளனர் என கூறப்படுகின்றது.
குறித்த பெண்கள் நாயாற்று கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென மூன்று பெண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் இரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீரில் மூழ்கிய நிலா என்ற 20 வயது யுவதியே உயிரிழந்துள்ளார்.
மேலதில தகவலுக்கு காத்திருங்கள்…