வி.ப.ச்.சா.ர விடுதியொன்று சுற்றிவளைப்பு – 2 பெண்கள் உட்பட மூவர் கைது.!

0
56
Common photo

கண்டி – தவுலகல பொலிஸ் பிரிவின் கடலாதெனிய பகுதியில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதியான்றில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், விபச்சார விடுதியை நிர்வகித்து வந்த ஒரு சந்தேக நபரும், விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தங்கியிருந்த இரண்டு பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிலிமத்தலாவை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவர் எனவும் அதேவேளை கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் 35 மற்றும் 48 வயதுடைய தெவனகல மற்றும் முருதலாவை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here