முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.
தரமற்ற நோய் எதிர்ப்பு தடுப்பூசி சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்கவே அங்கு அவர் முன்னிலையானார்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த 9ஆம் திகதியும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.